வரலாறு(HISTORY) 🆕
சுடலை மாடன் கதை :- சுடலை மாடன் கதை:– அன்று ஒருநாளில் புனிதமான கைலாச பார்வதத்தில், உலகையே கட்டி காக்கின்ற சிவனும் பார்வதியும் இடவலமாக வீற்றிருந்தார்கள். அங்கு மேலும் தேவர்கள், ரிஷிமார்கள், கம்போவர்கள், கணநாதர்கள், சாரணர்கள், சித்தர்கள் என கைலாசதிற்கானவர்களும் அங்கு இருந்தனர். உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், எந்த உயிருக்கு எவ்வளவு என தெரிந்து, அறிந்து உணவளிப்பதும், ஈசனகிய சிவனின் பணிகளில் ஓன்று. அவ்வாறே அன்றும் பார்வதி தேவியிடம் ஈசன், நான் பூலோகம் சென்று அனைத்து உயிர்களுக்கும் அவைகளின் பிரவிப்பயனின் படியான கணக்குப்படி உணவளித்து வருகிறேன் என கூறி பூலோகம் சென்றார். பூலோகத்தில் ஈசன், எறும்பு முதல் யானைவரையிலும், உருவாகுகிற திசு முதல் வயிற்றிலிருக்கும் சிசு வரையிலும் எவற்றிற்கும் குறைவில்லாது படியளக்கும்போது, அங்கே கைலாசத்தில் இருக்கும் அம்மை பார்வதியாளுக்கு ஒரு சந்தேகம் சிவனின் மீது வந்தது. தினமும் ஈசன் படியளக்க போகிறேன் என்று செல்கிராரே அது எவ்வாறு, எவருக்கும் தவறாது எப்படி ப...